செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (09:48 IST)

நெருக்கடியை தவிர்க்க ராஜினாமா? பலம் இழக்கும் காங்கிரஸ்!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 
 
மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கல் இதை ஏற்கவில்லை. 
 
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதல்வர்களான அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர்கள் வெளியிட்டனர். 
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பேகல், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஆகியோர் சந்தித்தனர். 
 
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தாமும், கமல்நாத்தும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
 
கமல்நாத் தனது ஆட்சியை மத்திய பிரதேசத்தில் தக்கவைக்க போராடி நிலையில், வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி தகவல் தெரிவிக்கின்றன.