1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (13:43 IST)

ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலைவெறி தாக்குதல்: ஆந்திராவில் பெரும் பரபரப்பு

ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.
 
உடனடியாக அருகிலிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து அவனை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த மர்ம நபர் யார் என்றும் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.