1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (13:11 IST)

இந்தியா-பிரிட்டன் விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா தகவல்

இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியல் இந்தியாவை பிரிட்டன் சேர்த்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வோர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பதும் எனினும் விரைவில் இந்தியா-பிரிட்டன் விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.