1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (07:53 IST)

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து: பைலட் பலி என தகவல்

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து: பைலட் பலி என தகவல்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
சமீபத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்தியாவின் முப்படை தலைவர் பிபின் ராவத் உள்பட 14 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட் மற்றும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதியில் இந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் பயிற்சிகள் எடுபட்ட பைலட் பலியானதாகவும் இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கல் என்றும் விமானப்படையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் விபத்தில் உயிரிழந்த ஒரு சில நாட்களில் மீண்டும் ஒரு விமான விபத்தை இந்திய விமானப்படை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது