வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:06 IST)

கருவிகள் வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு பின்னடைவு – ராகுல்காந்தி விமர்சனம்!

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாலில் , இதுவரை 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் 1,211 பேர் கொரோனாவால் பாதிப்பு; ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்   தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் 10 லட்சம் பேரை பரிசோதனை செய்ய 149 பரிசோதனைக் கருவிகளே இருக்கின்றன என அவர் விமர்சித்துள்ளார்.