வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:59 IST)

சமூக விலகல் இல்லையென்றால்.. ஒருவரால் 406 பேருக்கு நோய்த் தொற்று அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை !

சமூக விலகல், ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய்த்தொற்றை பரப்ப முடியும் என மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

நாட்டில் கொரோனாவினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 4423 பேராக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் மட்டு,  புதிதாக 354 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 326 பேர் குணமடைந்துள்ளனர்.

ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இப்போதைகு இல்லை தயவு செய்து இதுகுறித்து யாரும் ஊகிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

மேலும்சமூக விலக ஊரடங்கை பின்பற்றா விட்டால் ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய்த்தொற்றை பரப்ப முடியும் என எச்சரித்துள்ளது. நாட்டில் மொத்தம் 133 இடங்களில் 2500 ரயில் பெட்டிகளில் 4 0 ஆயிரம் படுக்கைகளை ரயில்வே தயார் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.