1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (08:09 IST)

சிக்கிம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம்.. 120 பேரை காணவில்லை..!

சிக்கிம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் உள்ள தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இதுவரை 40 பேர் உயிரிழந்தனர் என்றும், அதில் சிலர் ராணுவ வீரர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி  கரையோரத்தில் இருந்த ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 23 ராணுவ வீர்கள் உட்பட 120 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புபடையிலர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
 
வடக்கு சிக்கிம் மற்றும் நேபாள எல்லையில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதால் கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சங்தங் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தீஸ்தா நதியில் நேற்று அதிகாலை  திடீரென உயர்ந்தது. இதனால் சிக்கிம் - மேற்குவங்கத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 
 
இந்த வெள்ளத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 120 பேரை காணவில்லை என்றும்  மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva