1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:27 IST)

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அந்த மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் நேற்று இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் என்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva