1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (12:16 IST)

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: நீதிமன்றம் வலியுறுத்தல்..!

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. 
 
குஜராத் மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் தனது இரண்டு மகள்கள் நித்தியானந்தாவின் சீடராக சென்றுள்ளதாகவும் அவர்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மனு தாக்கல் செய்தவரின் இரண்டு மகள்கள் இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச விரும்பவில்லை என்று தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறினார். 
 
அப்போது நீதிபதி குற்ற உணர்வில் தான் அந்த சகோதரிகள் ஆஜராகவில்லை என்றும் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் 
 
அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஜமைக்காவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லை என்றும் ஆனால் சட்ட உதவிக்கான ஒப்பந்தம் இருப்பதால் இதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்
 
Edited by Siva