1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (22:36 IST)

மஹாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 2 பேர் பலி

accident
மஹாராஷ்டிர மாநிலம்  நாசிக் மாவட்டத்தில்  கடந்த வியாழக்கிழமை  அன்று அந்த மாநில அரசு பேருந்து ஒன்று 7 வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர்.

புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்குரு நகரில் இருந்து, நாசிக்  நோக்கி ஒரு எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, பேருந்தின் பிரேக் பிடிக்காததால், அது மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், முன்னாள் சென்று கொண்டிருந்த  4 பைக்குகள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் இருந்த 2 பேர் பேருந்திற்கு இடையில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj