1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:14 IST)

மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் கேசரி நாத் திரிபாதி காலமானார்!

kesarinath tripathi
மேற்கு வங்க முன்னாள் ஆளுனரும் பாஜக முன்னாள் தலைவருமான  கேசரிநாத் திரிபாதி கடந்த ஒரு வாரமாக மூச்சித்திணறல் காரணமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

உத்தரபிரதேச மா நில முன்னாள் சட்டமன்ற சபா நாயகரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுனருமான  கேசரி நாத் திரிபாதி இன்று கலை உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் காரணமானார். அவருக்கு வயது 88 ஆகும். 

பாஜக மூத்த தலைவரான இவர், கொரோனாவால் இரண்டு முறை பாதிக்கப்பட்டிருந்த அவர்.  இதற்காக லக்னோவில் சிகிச்சை பெற்றார்.

இந்த  நிலையில், இன்று காலையில் அவர் மறைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று  பிற்பகல் ரசூலாபாத்தில் அவரது உடல் தகனல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.