வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (08:32 IST)

மருமகள்களின் சண்டையில் மாமனார் மண்டை உடைந்து மரணம்

பீகார் மாநிலத்தில் இரு மருமகள்கள் குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையை தடுக்கப் போன மாமனார் மண்டை உடைக்கப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.


 
 
பீகார் மாநிலம் இலாஹி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாதுனி மண்டல் என்பவர் அவரது மகன்கள் மற்றும் மருகள்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். நேற்று காலை நாதுனியின் மருமகள்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களின் சண்டை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
 
இருவருக்கும் இடையே குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. இதனை தடுத்து இருவருக்கும் சமரசம் செய்ய குறுக்கே சென்றார் நாதுனி மண்டல். அப்போது ஆத்திரத்தில் இருந்த ஒரு மருமகள், அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து மாமனாரின் மண்டையை உடைத்தார். இதனால் பலத்த காயமடைந்த நாதுனி பரிதாபமாக மரணமடைந்தார்.