1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:23 IST)

6 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாமனாருடன் ஓடிய மருமகள்.. மகன் போலீசில் புகார்..!

ஆறு மாத குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாமனார் உடன் மருமகள் ஓடிப் போய்விட்ட நிலையில் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் உள்ள பந்தி என்ற மாவட்டத்தில் ரமேஷ் வைராகி என்பவர் தனது மகன் பவன் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடத்தி வைத்தார். இந்த நிலையில் ரமேஷ்  தனது மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும் அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் பவன் மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் திடீரென அவர் ஆறு மாத குழந்தையை விட்டுவிட்டு மாமனார் ரமேஷ் வைராகியுடன் ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
தனது தந்தை சட்டவிரோதமான செயல் ஈடுபட்டு வருகிறார் என்றும் தனது தந்தை தனது மனைவியை ரகசிய திருமணம் செய்து விட்டு ஓடி போய் விட்டதாகவும் தனது இருசக்கர வாகனத்தையும் அவர் திருடிவிட்டார் என்றும் அவரை எங்கு தேடியும் இருக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva