1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (12:14 IST)

தனது ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா..

கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 15 இடங்களில் 12 இடங்கள் முன்னிலை பெற்று பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது.

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்பட்ட நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 2 உடங்களில் முன்னிலையில் உள்ளது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.