1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:35 IST)

வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: கணவர் குடும்பத்தோடு கைது..!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கணவர் குடும்பத்தாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது கணவர் குடும்பத்தை கூண்டோடு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நொய்டா என்ற பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விகாஷ் என்ற இளைஞருக்கு கரீஷ்மா என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களில் இருந்தே வரதட்சணை கொடுமையால் அந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது
ஏற்கனவே 11 லட்சம் மதிப்புள்ள நகை, கார் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்ற நிலையில் கரீஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி மேலும் சில லட்சம் ரூபாய் வரதட்சணை வேண்டும் என்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது

பெண் குழந்தை பிறந்ததால் அபராதமாக 21 லட்சம் கூடுதல் வரதட்சணை மற்றும் அதிநவீன சொகுசு கார் கேட்டு கரிஷ்மாவை அவருடைய கணவர் விகாஷ், மாமியார் கணவரின் சகோதரி மற்றும் சகோதரர்கள் கொடுமைப்படுத்திய நிலையில் ஒரு கட்டத்தில் கணவரின் குடும்பத்தினர் கரீஷ்மாவை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கரிஷ்மாவின் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதாகவும், மாமியார் கணவரின் சகோதரி சகோதரர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran