1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (17:12 IST)

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு.! சிபிஐக்கு மாற்றப்படுமா..? டிஜிபியிடம் பெற்றோர் மனு..!

Child Issue
புதுச்சேரியில் 9  வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபியை சந்தித்து மனு அளித்தனர். 
 
கடந்த மாதம் 2 ந்தேதி புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர் வீட்டருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்து வாய்க்காலில் வீசிய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி கலைச்செல்வனை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்து அவரது தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 
இந்நிலையில் சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையோ அல்லது உடற்கூறாய்வு அறிக்கையோ கேட்டும் இதுவரை காவல் துறையினர் வழங்கவில்லை எனக்கூறியும், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும் சிறுமியின் பெற்றோர் காவல் துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி-ஐ சந்தித்து புகார் மனு அளித்தனர்.