வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 20 மே 2020 (18:43 IST)

கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்க வேண்டாம் !

மத்திய அரசுப் பணியாளர்களில் கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,  ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
.
4 வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, குறைவான 50 % ஜூனியர் பணியாளர்களை மட்டும் பணிக்கு வருமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அளித்துள்ளது.

இதில், கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,  ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என –அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் இவர்களை விடுத்து 50% பணியாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிவரை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.