1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (19:44 IST)

துணிக்கடைக்குள் புகுந்த மாடு என்ன செய்தது தெரியுமா ? வைரல் வீடியோ

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல துணிக்கடைக்குள் நுழைந்த பசு ஒன்று அங்கு சுழன்றுகொண்டிருக்கும் ஃபேனுக்கு அடியில் அமர்ந்து கூலாக ஓய்வெடுக்கும்  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓரு துணிக்கடைக்கு கடந்த ஏழு மாதங்களாக ஒரு மாடு வந்துள்ளது. அதனுள் அந்தக் கடையில்ன் ஓனர் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தபோதும் தினந்தோறும் கடைக்குள் வரும் மாடும் அமைதியாக அங்கு விட்டத்தில் மாட்டி இருக்கும் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து வாங்கிவிட்டு செல்கிறது.

ஆரம்பத்தில் மாட்டைக் கண்டித்து அதை வெளியே துரத்தியுள்ளார் துணிக்கடை முதலாளி போலிமரே ஓபாயா .பின்னர் மாடு தொடர்ந்து கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.