1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (19:11 IST)

சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி

சிவசங்கர் பாபா பாய் தமிழ் நாட்டுக்கு அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சுஷில் ஹரி பள்ளியைநடத்திவரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் அடைந்தனர் இதனையடுத்து அவர் டெல்லியில் இன்று காலை கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர் இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு சிவசங்கர் பாபா தமிழ் நாட்டுக்கு அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது 
 
இதனையடுத்து இன்று காலை டெல்லியில் இருந்து சிவசங்கர் பாபா விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்றும் அதன் பின்னர் அவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது