1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (13:28 IST)

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வாட்டர் ஏடிஎம் கார்டுகள்: முதல்வர் அறிவிப்பு..!

குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் வாட்டர் ஏடிஎம் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 
 
டெல்லியில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதனை அடுத்து மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாட்டர் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த காடுகள் மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து முதல்வர் அவர்களுக்கு டெல்லி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran