செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 மே 2021 (08:45 IST)

குழந்தைகளுக்கும் கோவாக்சின் - பரிசோதனை விரைவில் துவக்கம்!

ஜூன் 1 முதல், 2 வயது முதல் 18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை துவங்கபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் உடனடியாக தடுப்பூசியை அனைவருக்கும் கொடுப்பது இயலாத காரியமாக உள்ளது. 
 
இந்நிலையில் முன்னதாக கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் பார்முலாவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இத்னோடு 2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பரிசோதனைக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்கபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.