வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (11:59 IST)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டவர்கள் தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதலில் 6 மாத கால அளவை நிபுணர் குழு தெரிவித்திருந்தது. ஆனால் அது நீண்ட இடைவெளி என்பதால் தற்போது 3 மாதத்துக்குப் பின் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.