வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (11:40 IST)

மேட்ரிமோனியல் தளத்தில் இதெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!

உலகம் முழுவதும் கொரோனா என்ற வார்த்தை மக்களின் மனதில் ஆழமான பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் உள்ள மக்களிடம் இருந்து கொரோனா என்ற வார்த்தை இனிமேல் மறைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அந்த அளவுக்கு அது மக்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்நிலையில் மேட்ரிமோனியல் தளத்தில் பெண் ஒருவர் தன்னுடைய பயோ டேட்டாவை அளித்த போது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதையும் சேர்த்து பதிந்துள்ளார். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு இது போல மாற்றங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும் மற்ற சில இன்றியமையாத காரணங்களுக்கும் அளிக்கப்பட வேண்டியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.