1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:56 IST)

மே மாதம் உச்சத்தை தொடும் கொரோனாவின் ஆட்டம்!!

மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்றும், அதன் பின்னர் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், ஊரடங்கை இப்போது இருப்பதை விட கடுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிகிறது.