1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:16 IST)

50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்; மோசமடையும் இந்திய நிலவரம்!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா பாதிப்புகள் 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 49,30,236 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 79,292 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,59,399 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,90,061 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.