1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (15:47 IST)

மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கும் போலீஸார் ! வைரல் வீடியோ

குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதில் முக்கியமாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசின் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதேபோன்று டெல்லி, மற்று சென்னை உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பிரபல பல்கலைக் கழகம், மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தபிரதேச மாநிலம்  லக்னோவில் உள்ள நட்வா கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியின் வாயிலை போலீஸார்  இழுத்து பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதேபோல் ,  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அலிகார் போலீஸார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.
 
இந்த வீடியோவை எடுத்த அலிகர் நிருபர் அட்னனை போலீஸார் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.