தொடர்புடைய செய்திகள்
- மணல் கடத்தல் புகார் அளித்த விஏஓ கொலை.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்..!
- அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆலோசனை.
- பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ்: அதிமுக தலைமை அறிவிப்பு..!
- இலவச 5ஜி குடுத்து நஷ்டப்படுத்துறாங்க! – ஜியோ மீது வோடபோன் புகார்!
- வேட்புமனுக்களை வாபஸ் செய்யும் ஓபிஎஸ் அணி.. என்ன காரணம்?
அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்..!
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை மாநில சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நிலையில் அவர் கீழ் பணியாற்றி உள்ள காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கட்சிக்கு தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்க நிலையில் அந்த பணியை அவர் ஆற்ற கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
