1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (21:10 IST)

அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில் ஆணுறைகள்

mathya pradesh
மத்திய பிரதேச மாநிலத்தில்  புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஜபுவா மாவட்டத்தில் தண்டலம் பகுதியில், முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் முக்கிய  முந்திரி கன்யா விவாகம் மற்றும் நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஏழைகள், வசதி குறைந்த பின்னணி கொண்டவர்களுக்கு திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது. இதில், புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  ஒரு வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.