1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:34 IST)

சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

chithra
முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
மேலும் தொலைபேசி உரையாடல்களையும் அவர் ஒட்டுக்கேட்டுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது என்பதும் இது குறித்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் விசாரித்து அதனை தள்ளுபடி செய்தது. சித்ரா ராமகிருஷ்ணன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிந்தோ தெரியாமலோ அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன