செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (15:46 IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
இந்த உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார் 
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்