1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மாஸ்க் அணிய வேண்டாம் மகாராஷ்டிரா: மாஸ்க் அணிய வேண்டும், மத்திய அரசு

நாளை முதல் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநில மக்கள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
 
ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநில அரசு மாஸ்க் வேண்டாம் என்றும் மத்திய அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறியிருப்பதால் அம்மாநில மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.