1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (14:00 IST)

விமானத்தில் குறுவாள் எடுத்து செல்லலாம்..! – சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சீக்கியர்கள் கத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் கொண்டு செல்லும் குறுவாள் 22.86 செ.மீக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிளேடு என சொல்லப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.23 செ.மீக்கு அதிகமாக இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.