1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (17:34 IST)

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்' - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும்,, ஆனால் கட்டாயம் நடைபெறும் என அந்தந்த மாநில அமைச்சர்களும் முதல்வரும்  அறிக்கையில் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவுள்ள தேர்வுகளை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரொனா வைரஸ் காரனமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.