1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2019 (16:39 IST)

சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்!

உத்தபிரதேச மாநிலம் ஆக்ர அருகில் இருக்கும் அலிகார் பகுதியில் வசித்து வந்தவர் மான்பால் சிங். இவருக்கு அண்மையில் சந்நாஸ் என்ற சாமியாருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சேர்ந்து கஞ்சா அடித்துவந்துள்ளனர். அப்போது சாமியார் : உன் மனைவியுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தால் உன்னை பெரும்பணக்காரனாக மாற்றுகிறேன்.  என்று சொல்லியிருக்கிறார்.
இதனை உண்மை என நம்பிய மான்பால், தனது மனைவியிடம் (ரஜ்னியை )சாமியாருடன் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டி அதிர்ச்சி அடைந்த அவர் , மான்பாலை திட்டியதுடன் கடுமையாக எச்சரித்துள்ளார். 
 
இந்நிலையில் தொடர்ந்து மனைவியிடம் இதுகுறித்து தெரிவிக்க...அவரும் மச்சான்  மான்பாலை எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மான்பால் மனைவியை(ரஜ்னியை ) கங்கை நதிக்கு அழைத்துச் செறு மூழ்கடித்துள்ளார் என்று சகோதரதர் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து போலீஸார் கங்கை நதியில் தேடி, ரஜ்னியின் சடலத்தை மீட்டனர். பின்னர் கொலை சம்பந்தமாக மான்பால் மற்றும் சாமியார் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர் இச்சம்பவ அங்குள்ள பகுதியில் ப்ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.