செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:24 IST)

பில்கிஸ் பானு வழக்கு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Bilkis Bano
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் 11 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவரது 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது 
 
இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் கடந்த காலத்தில் அவர்கள் குஜராத் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்யப்பட்டனர். 11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்தனர் 
 
இந்த வழக்கு இன்று 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன