வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:37 IST)

இன்று முதல் பலரது வங்கிக்கணக்கு முடக்கம்: என்ன காரணம்?

Bank
இன்று முதல் பலரது வங்கி கணக்குகள் முடங்கப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி நிலையில் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது 
 
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குடன் கே.ஒய்.சி ஆவணங்களை இணைக்காமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்றி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன பலர் புகார் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நீண்ட நாட்களாக கே.ஒய்.சி விவரங்களை இணைக்காமல் இருந்தால் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்றும் எனவே இதுகுறித்து அருகிலுள்ள வங்கிகளை அணுகி இதனை சரி செய்து கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது
 
பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1 முதல் இணைக்காமல் ஆவணங்களை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்கு மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.