வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (07:51 IST)

தங்கை திருமணத்தை நடத்த கஞ்சா விற்ற இளைஞர்.. போலீசில் சிக்கியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி..!

பெங்களூரில் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் தங்கை திருமணத்தை நடத்த பணம் வேண்டும் என்பதற்காக கஞ்சா கடத்தியதாகவும் அப்போது அவர் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரில் ஹோட்டல் ஊழியராக வேலை செய்து கொண்டிருக்கும் பத்ருதின் என்பவர் குடும்பம் ஏழ்மையில் இருந்ததாகவும் குறிப்பாக அவரது சகோதரிக்கு திருமணம் செய்ய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் தெரிகிறது.

ஹோட்டல் வேலை செய்வதால் கிடைக்கும் பணத்திலிருந்து தங்கை திருமணத்தை நடத்த முடியாது என்ற முடிவு செய்த பத்ருதின் கஞ்சா கடத்த திட்டமிட்டார். குறைந்த விலையில் கஞ்சா வாங்கி அதனை விற்பனை செய்து வந்த நிலையில் திடீரென காவல்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பில் ஆன கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து பத்ருதின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஹோட்டல் கஷ்டப்பட்டு வேலை செய்து தனது தங்கை திருமணத்திற்காக பணம் சேர்த்து கொண்டு இருந்தார் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் கஞ்சா விற்பனை செய்தார் என தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva