1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (13:18 IST)

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை

pudhucherry- panjumittai
புதுச்சேரியில்  பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரை உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும், விற்பனைக்காக முழு உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை  உத்தரவிட்டுள்ளனர்.