1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (15:36 IST)

நாங்களும் சிலை வைப்போம்: கர்நாடக அரசு தடாலடி

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிலை வைப்போம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் பல முக்கிய இடங்களில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அடுத்ததாக உ.பியில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.
 
இந்த சாதனையெல்லாம் முறியடிக்க மும்பையில் சத்ரபதியில் பிரம்மாண்ட சிலை கட்டப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயர சிலை அமைக்கப்படும் என கூறியுள்ளார்.