வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (22:34 IST)

உயிரிழந்த பிச்சைக்கார‌ர் பையில் ரூ.1.83 லட்சம்: சக பிச்சைக்காரர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுகோள்

ஆந்திராவில் உயிரிழந்த பிச்சைக்கார‌ர் பையில் இருந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள மார்க்கண்டேஸ்வ‌ர‌ர் கோவில் அருகே ஒரு பிச்சைக்காரர் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். காஞ்சி நாகேஸ்வர‌ர் என்ற பெயரை கொண்ட இந்த சாது நேற்று உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை இறுதிச்சடங்கு செய்ய தேவையான பணத்தை எடுக்க அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த சக பிச்சைக்கார்கள் உடனடியாக இந்த தகவலை காவல்நிலையத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பணத்தை மீட்ட போலீசார், காஞ்சி நாகேஸ்வர‌ரின் இறுதி அஞ்சலிக்கு 3 ஆயிரம் ரூபாயை செலவு செய்து விட்டு மீதியை என்ன செய்வது என்று ஆலோசனை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மீதமுள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சாதுக்கள் நல திட்டத்திற்கு வழங்கிட வேண்டும் என சக சாதுக்கள் கேட்டுகொண்டுள்ளதால் அவ்வாறே செய்யலாம் என காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது