தொடர்புடைய செய்திகள்
- மணிப்புரில் இருந்து சென்னை வந்த 9 பேர் கொண்ட குடும்பம்.. உதவி செய்த தமிழக அரசு..!
- மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்: சிபிஐ விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை
- நாளை தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. முழு பயண விவரங்கள்..!
- ''பேயைவிட மோசமானவரா பிரதமர் மோடி?'' திருச்சி மாநாட்டில் ஆ.ராசா பேச்சு
- மணிப்பூர் கலவரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்: முதலமைச்சர் பிரேன் சிங் அதிர்ச்சி தகவல்..!
மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதி: அமைச்சர் அமித்ஷா
மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதி இருக்கலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜூலை 19ஆம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது.
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன என்றும் பிரதமர் மோடி அரசின் மாண்பை குறைக்க சதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மணிப்பூர் அமைதியை சிதைக்கும் வகையில் இந்த வீடியோக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மணிப்பூர் பெண்கள் வீடியோ வீடியோ குறித்த விரிவான தகவல்களை பெரும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
