தொடர்புடைய செய்திகள்
- திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு எச்சரிக்கை..!
- நேற்று கொடுத்த அனுமதி இன்று ரத்து! சதுரகிரிக்கு செல்ல தடை! - பக்தர்கள் அதிர்ச்சி!
- ஆவணி மாத பூஜைக்காக இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு: குவியும் பக்தர்கள்..!
- இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா.. குவிந்த பக்தர்கள்
- ராமர் கோயில் பாதைகளில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
அமா்நாத் யாத்திரை நிறைவு: இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை...!
அமர்நாத் யாத்திரை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.
இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் செய்து வருகின்றனர்.
48 கிலோமீட்டர் கொண்ட இந்த வழித்தடத்தில் 14 கிலோ மீட்டர் தொலைவு செங்குத்தான வழித்தடம் என்பதும் இந்த வழித்தடங்களில் தான் பக்தர்கள் ரிஸ்க் எடுத்து பனிலிங்கத்தை தரிசனம் செய்ய சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை யாத்திரை நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் 5.10 லட்சம் பக்தர்கள் குகை கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது என்பதும், ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைந்தது என்பதுன் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
