1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:47 IST)

முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை

ஆந்திர மாநிலத்தில் குண்டூரைச் சேர்ந்த ஒரு வியாபாரி முதல்வருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆ ந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள குண்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த வர்மா(40) அதேபகுதியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010 ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

அந்தக் கடனை வர்மா திருபிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பைனான்சியர் இன்னும் பணம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வர்மாவுக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால், மனம் உடைந்த வர்மா சில நாட்களாக பைனாசியர் போன் செய்தால் அதை எடுக்காமல் இருந்துள்ளார்.

ஆனால், பைனான்சியர் நேரடியாக வீட்டிற்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வர்மா, நேற்றிரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வர்மா எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர்.

அதில், பைனான்சியரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவட்க்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.