தொடர்புடைய செய்திகள்
- அதானி குழும விவகாரத்தால் கூச்சல் குழப்பம்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
- அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு? விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு!
- பட்ஜெட் கூட காப்பாற்றவில்லை.. மீண்டும் சரிவை நோக்கி சென்செக்ஸ்!
- 2.5 பில்லியன் டாலர் பங்கு!? அதானி குட்டு அம்பலம்? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
- பங்குச்சந்தை உயர்ந்தாலும் உயராத அதானி நிறுவன பங்குகள்: முதலீட்டாளர்கள் கவலை
FPO பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி! பணத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு..!
அதானி நிறுவனத்தின் FPO சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 20000 கோடி இதன் மூலம் நிதி திரட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி குழுமங்களின் பங்குகள் குறைந்து வந்த போதிலும் இந்திய மக்கள் அதானி மீது நம்பிக்கை வைத்து அவருடைய FPO திட்டத்தில் முதலீடு செய்தனர். இருபதாயிரம் கோடி திரட்ட திட்டமிட்டு இருந்த நிலையில் முழுமையாக பணம் திரட்டப்பட்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருவதை அடுத்து FPO விற்பனையை திரும்ப பெறுவதாக அதானி குழும இயக்குனர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதலீட்டாளர்களுக்கு இருபதாயிரம் கோடியை திருப்பிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் பணம்ன் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்களை தொடர்ந்து நஷ்டத்தில் ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தான் தனக்கு முக்கியம் என்றும் அதனால் பெற முடிவு செய்துள்ளதாகவும் அதானி தெரிவித்துள்ளார்.
Edited by Siva
