தொடர்புடைய செய்திகள்
- 9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி.. 14வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி
- பட்ஜெட் தினத்தில் எகிறும் பங்குச்சந்தை.. மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டுமா சென்செக்ஸ்?
- அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்கப்படுகிறதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு..!
- அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: உதவிக்கரம் நீட்டும் அபுதாபி
- உலக கோடீஸ்வரர் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி..!
பங்குச்சந்தை உயர்ந்தாலும் உயராத அதானி நிறுவன பங்குகள்: முதலீட்டாளர்கள் கவலை
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் ஆனால் பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயரவில்லை என்பது அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் வீழ்ச்சி அடைந்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் புதன் வெள்ளி மற்றும் இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய நான்கு நாட்களும் தொடர் சரிவில் அதானி நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
