1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (13:17 IST)

பசு மாடுகளை ரேப் பண்ணிய கொடூரன்

உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு தினமும் பசுக்களை பாலியல் உறவு செய்து வந்த ஒருவனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசம் அயோத்தியா பகுதியில் உள்ளது பாபா ஆசிரமம். இங்கு நிறைய பசு மாடுகளும், காளை மாடுகளும் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை பாதுகாக்க ராஜ்குமார் என்பவரை காவலாளியாக பணியமர்த்தியுள்ளனர் ஆசிரமத்தினர்.
காலையில் காவலாளியாக பணிபுரியும் ராஜ்குமார், இரவு நேரங்களில் காமுகனாக மாறி அங்குள்ள பசு மாடுகளோடு பாலியல் உறவை மேற்கொண்டு வந்திருக்கிறார். சமீப நாட்களாக ராஜ் குமாரின் நடவடிக்கையில் ஆசிரமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராயும்போது ராஜ்குமார் பசு மாடுகளை புணர்வதை கண்ட ஆசிரமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவனை கையும் களவுமாக பிடிக்க எண்ணி காத்திருந்தனர். மறுநாளும் அதுபோலவே ராஜ்குமார் பசுக்களோடு புணர செல்லும்போது அவனை பிடித்து, அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தான் குடித்திருந்ததாகவும், தனக்கு அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒன்றுமே நினைவில் இல்லை என்றும் ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.