1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (08:51 IST)

அம்பேத்கார் பெயரில் மாவட்டம்: எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!

violence
அம்பேத்கார் பெயரில் மாவட்டம்: எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!
 அம்பேத்கர் பெயரில் மாவட்டம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதனையடுத்து ஆந்திர அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர்களின் வீடுகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
 
வன்முறை நடைபெற்ற அமலாபுரம் என்ற தொகுதிக்கு 144 தடை உத்தரவும். வன்முறை குறித்து விசாரணை நடத்தவும் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது