வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 மே 2023 (15:34 IST)

கல்லூரியில் சக மாணவியை எரித்த மாணவி

abuse
கேரளா மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரி  இயங்கி வருகிறது. இங்கு சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள வெள்ளையணி வேளாண்மை என்ற விவசாய  கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை சக மாணவி கொடூரமாக  தீ வைத்து எரித்தார். இந்தச் சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த வேறொரு மாணவி அவரை தீ வைத்துள்ளார்.

இந்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் திருவல்லம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.