வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:27 IST)

மாடல் அழகியை கொடூரமாக கொலை செய்த ஆண் நண்பர்: மும்பையில் பயங்கரம்

மும்பையில் மாடல் அழகி ஒருவரை அவரது ஆண் நண்பர் கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த மான்ஸி தீட்சித் என்ற இளம்பெண், மும்பையில் மாடலிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு முஸம்மில் சையத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முஸம்மில், மான்ஸி தீட்சித்தை தனது பிளாட்டிற்கு அழைத்துள்ளார். அங்கே சென்ற மான்ஸிக்கும் முஸம்மில்லிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முஸம்மில், மான்ஸியை கொலை செய்து அவரது பிணத்தை சூட்கேஸில் அடைத்துள்ளார்.
பின்னர் அந்த சூட்கேஸை ஒரு புதரில் வீசிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் முஸம்மில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.