1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (21:04 IST)

மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் மீது மெட்ரோ நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
சென்னை உள்பட பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ ரயிலில் சில நேரங்களில் சமூக விரோத செயல்களூம் அவ்வப்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து வருவதாக செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண், பெண் பயணிகள் இருக்கும் ஒரு ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran